வெள்ளி, 11 மார்ச், 2011

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு.

(கடந்த திங்கள் 7, மார்ச் அன்று ராமேஸ்வரத்து கடைகளில் தொங்கிய தினகரன் செய்தியிலிருந்து கீழே)

ராமேஸ்வரம், மார்ச், 7: கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தடுத்து விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து 572 விசைப்படகுகள் நேற்று முன்தினம் காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றன. 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது 5 பைபர் படகுகளில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியடித்தனர். குறைந்தளவு மீன்களுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக