செவ்வாய், 8 மார்ச், 2011

கோட்டைப்பட்டிணத்தைச் சேர்ந்த 4 படகுகளின் மீன் வலை அறுப்பு

இன்று (மார்ச் 8, 2011) கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப் பட்டிணத்தைச் சேர்ந்த 4 விசைப்படகுகளின் வலைகளை அறுத்து விட்டார்கள் இலங்கை படையினர்.

ஒவ்வொரு வலையும் சுமார் 50,000 ரூபாய் மதிப்பிலானவை. இன்றைய வருமானத்தை இழந்த மீனவர்கள்,  புதிய வலைகள் வாங்கிய பிறகுதான் இனிமேல் தொழிலுக்குப் போக முடியும்.

மீனவர்களின் பெயர்கள், நடந்த இடம் போன்ற மேல் விபரங்களைக் கேட்டுள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக