வெள்ளி, 11 மார்ச், 2011

கோடியக்கரை அருகே: நடுக் கடலில் மீனவர்களிடமிருந்து மீன்கள் பறிமுதல்

ேதாரண்யம், மார்ச் 10: கோடியக்கரைக்கு அருகே நடுக் கடலில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், பொருள்களை புதன்கிழமை இரவு பறித்துச் சென்றவர்கள் இலங்கை மீனவர்களா என்பது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஆ. சுரேஷ் (26), புதுப்பேட்டை பகுதி மு. முத்துராசன் (18), முத்துத்துரை (43) ஆகிய மூவரும் நாகை மாவட்டம், கோடியக்கரையில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

கோடியக்கரையிலிருந்து செவ்வாய்க்கிழமை பகலில் கண்ணாடியிழைப் படகு ஒன்றில் கடலுக்குச் சென்றனர். அவர்கள் மூவரும் புதன்கிழமை இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு மூன்று படகுகளில் வந்த 7 பேர், அந்த மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, மீனவர்கள் பிடித்து வைத்திருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், இடுப்பில் அணிந்திருந்த வெள்ளிச் சங்கிலி உள்பட மீன்பிடி உபகரணங்களைப் பறிமுதல் செய்து, எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மீனவர்கள் மூவரும் வியாழக்கிழமை பிற்பகல் கரைக்குத் திரும்பினர். படகுகளில் வந்து பொருள்களை பறித்துச் சென்றவர்கள் இலங்கை மீனவர்களாக இருக்கலாம் என கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்கள் அளித்த தகவலின் பேரில், கோடியக்கரையில் மீன் வளத் துறையினர், போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First Published : 11 Mar 2011 11:21:46 AM IST
Source: http://www.dinamani.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக